வீட்டு சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

thagavalthalam

      சேலத்தில் நேற்றிரவு பெய்த கனமழையில் வீட்டு சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
பொன்னம்மா பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த இந்த விபத்தில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஸ்ரீநிவாசன், அவரது மகள் மற்றும் பேத்தி உயிரிழந்தனர். ஸ்ரீநிவாசனின் மனைவி மற்றும் இரு பேரக்குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.