சேலத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் 2 சிறுமிகள் மீட்பு



சேலத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த திண்டுக்கலைச் சேர்ந்த 2 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
  சிறுமிகளைக் கொடுமைப்படுத்திய ஜவுளிக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் சேவியர் மாநகர காவல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
  இதுதொடர்பாக, சேலம் அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சிறுமிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருந்த ஜவுளிக்கடை உரிமையாளர், குழந்தைகளை துன்புறுத்தியதுடன், ஆரோக்கியமற்ற இடத்தில் தங்க வைத்து, உணவளித்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                        -- இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்