முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் அடக்கம்

              றைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் அவரது சொந்த கிராமமான பூலாவரியில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மூச்சுத்திணறல் காரணமாக நேற்று சென்னையில் காலமான வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் பூலாவரியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திமுக பொருளாளர் ஸ்டாலின், நாடாளுமன்ற திமுகத் தலைவர் டிஆர் பாலு, கனிமொழி, திமுக முன்னாள் அமைச்சர்கள் கோசி மணி, கேஎன் நேரு, பொன்முடி, பெரியசாமி, சுப தங்கவேலன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச்செயலர் வைகோ நேரில் சென்று வீரபாண்டி ஆறுமுகத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், பாமக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பிற்பகலில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பூலாவரி கிராமத்தில் உள்ள அவரது சொந்த தோட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் காலமானார்


 
 
      திமுக மூத்த தலைவர்ரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் சென்னை மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். கடந்த 1 வாரமாக மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுஷரிக்கப் போவதாக திமுக அறிவித்துள்ளது. திமுக கொடிகள்அனைத்தும் அரைக் கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் வாழ்க்கை : மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்திற்கு வயது 75 திமுகவில் 1957-ல் உறுப்பினரானார். தமிழக சட்டப்பேரவையில் 1962 முதல் 2011 வரையிலான  காலகட்டத்தில் 6  முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 1978 முதல் 84 வரையிலான  காலகட்டத்தில் சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் வீரபாண்டி ஆறுமுகம். திமுக ஆட்சியில் 3 முறை அமைச்சராக பதவி வகித்துள்ளார் 1989 ஆண்டு முதல் முறையாக திமுக ஆட்சியில் அமைச்சரானார்.
அப்போது, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத் துறை அவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த வீரபாண்டி ஆறுமுகம் கடைசியாக  வேளாண்மை துறையை கவனித்து வந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சங்ககிரி தொகுதியில் அதிமுகவிடம் தோல்வியடைந்தார்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

சேலத்தில், ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு மையம் : முதலமைச்சர் உத்தரவு

       சேலத்தில், ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு மையம் அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட அரசு இசை பள்ளி, சவகர் சிறுவர் மன்றம், நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் அடங்கிய இந்த மையம் தளவாய்பட்டியில் அமையவுள்ளது. அதில், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மண்டல உதவி இயக்குநர் அலுவலகமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு இசை கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் மாதாந்திர ஊக்கத்தொகை 250 ரூபாயிலிருந்து 500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு ஆகிய 4 இடங்களில் படிக்கும் 691 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய உத்தரவால், அரசிற்கு 15லட்சத்து 48ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுரை கூறியவர் அடித்துக் கொலை ( காணொளி )

    குடிபோதையில் இருந்த இளைஞர்கள், உதவி செய்ய வந்தவரையே கொலை செய்துள்ள கொடூர சம்பவம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆரம்ப சுகாதார மையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்த சண்முக சுந்தரம் என்பவர், தீபாவளியன்று தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 5 இளைஞர்கள் குடிபோதையில் 2 இருசக்கர வாகனங்களில் சென்றனர். மிகவும் வேகமாகச் சென்ற அந்த இளைஞர்கள், திடீரென வாகனங்களில் இருந்து தவறி, கீழே விழுந்தனர். இதையடுத்து அந்த இளைஞர்களுக்கு உதவி செய்த சண்முக சந்தரம், வாகனத்தில் நிதானமாக செல்லும்படி, அவர்களுக்கு அறிவரை கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், சண்முக சுந்தரத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அருகேயுள்ள மைதானத்துக்கு இழுத்துச் சென்று, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில், பலத்தக்காயமடைந்த சண்முக சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

டெங்கு,மலேரியா, டைபாய்டு போன்ற கொடிய காய்ச்சல்கள் பரவிவருகிறது


   ந்த காய்ச்சலை ஆரம்பித்திலேயே மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும். அதோடு டெங்கு காய்ச்சல் வந்தால்  அதற்கான அறிகுறிகள்  காய்ச்சல் அதிகமாக இருக்கும், உடம்பு வலி அதிகமாகிவிடும், கண் சிவந்துவிடும், முதுகு வலி, எலும்புவலி அதிகமாக இருக்கும், சாப்பாடு ஏற்றுக்கொள்ளாது. 

டெங்கு பரவாமல் தடுக்க முதலில் கொசுவை ஒழிக்க வேண்டும். அதற்கு வீடுகள், சாலைகள், தண்ணீர் டேங்குகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பீ.டி என்கிற கொசு மருந்து, அபேட் என்கிற மருந்தை தண்ணீர் தொட்டிகளில் கலக்க வேண்டும். இதன் மூலம் கொசு உற்பத்தி தடுக்கப்படும். பைத்ரியோ ரம் என்ற கொசு மருந்தை அடித்தால் கொசுக்கள் அழிந்து விடும்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

சேலத்தில் ஒரே நாளில் காய்ச்சலுக்கு 3 சிறுமிகள் பலி

   சேலத்தில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் மூன்று சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதில், இரண்டு பேர் சேலம் அரசு மருத்துவமனையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இடைப்பாடியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹரிணி, அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று மரணமடைந்தார்.
இதேபோன்று, நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவர்ஷா என்ற சிறுமியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீவர்ஷாவின் சகோதரியான ஸ்ரீநிஷாவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை ஸ்ரீநிஷா  உயிரிழந்த நிலையில், மாலையில் ஸ்ரீவர்ஷாவும் மரணமடைந்தார். இரட்டைப் பிறவிகளாக இவர்கள் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்தது, அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதன்படி, காய்ச்சலால் உயிரிழந்த ஒரு குழந்தையின் அருகிலேயே மற்றொரு குழந்தைக்கு  பல மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து, ஏராளமானோர் திரணடு நேற்று அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்