அறிவுரை கூறியவர் அடித்துக் கொலை ( காணொளி )

    குடிபோதையில் இருந்த இளைஞர்கள், உதவி செய்ய வந்தவரையே கொலை செய்துள்ள கொடூர சம்பவம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆரம்ப சுகாதார மையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்த சண்முக சுந்தரம் என்பவர், தீபாவளியன்று தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 5 இளைஞர்கள் குடிபோதையில் 2 இருசக்கர வாகனங்களில் சென்றனர். மிகவும் வேகமாகச் சென்ற அந்த இளைஞர்கள், திடீரென வாகனங்களில் இருந்து தவறி, கீழே விழுந்தனர். இதையடுத்து அந்த இளைஞர்களுக்கு உதவி செய்த சண்முக சந்தரம், வாகனத்தில் நிதானமாக செல்லும்படி, அவர்களுக்கு அறிவரை கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், சண்முக சுந்தரத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அருகேயுள்ள மைதானத்துக்கு இழுத்துச் சென்று, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில், பலத்தக்காயமடைந்த சண்முக சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்