குடிபோதையில் ஆர்.ஐ ரகளை : மக்களுக்கு இடையூறு செய்ததால் கைது


     மது அருந்தி விட்டு போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரது நண்பர்கள் இருவரையும் பென்னாகரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்று பேரும் பயணித்த காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுரங்க துறை அதிகாரியாக பணியாற்றி வரும் பார்த்தசாரதி, நண்பர்களுடன் நேற்று மாலை ஒகேனக்கல் சென்று விட்டு பென்னாகரம் வழியாக ஊர் திரும்பியுள்ளனர்.
அப்போது, சாலையிலேயே காரை நிறுத்திய அவர்கள் மதுவும் அருந்தியுள்ளனர்.அதனால், ஏற்பட்ட போக்குவரத்தை சரி செய்வதற்காக போலீசார் பார்த்தசாரதியிடம் பேசியதற்கு, போலீசாரையும் அவர் மிரட்டியுள்ளார். அதனை தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மூவரையும் பென்னாகரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
                                  இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்