சேலத்தில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மாயம்


        சேலத்திற்கு மாமனார் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்றபோது, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சுரேஷ் காணாமல் போய்விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே நரசோதிப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சுரேஷ், பொங்கல் தினத்தன்று காலையில் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார்.
பல மணி நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததை அடுத்து, உறவினர்கள் சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 3 தனிப்படை அமைத்து காணாமல் போன சுரேஷைத் தேடி வருகின்றனர்.
இஸ்ரோவில் 6 ஆண்டுகள் விஞ்ஞானியாக பணியாற்றி விலகிய சுரேஷ், தற்போது பெங்களூரு நகரில் கணிப்பொறி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பொங்கலுக்கு, சேலத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தபோது காணாமல் போனார்.
                - இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்