வீட்டு சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

thagavalthalam

      சேலத்தில் நேற்றிரவு பெய்த கனமழையில் வீட்டு சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
பொன்னம்மா பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த இந்த விபத்தில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஸ்ரீநிவாசன், அவரது மகள் மற்றும் பேத்தி உயிரிழந்தனர். ஸ்ரீநிவாசனின் மனைவி மற்றும் இரு பேரக்குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
thagaval


சேலத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் 2 சிறுமிகள் மீட்பு



சேலத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த திண்டுக்கலைச் சேர்ந்த 2 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
  சிறுமிகளைக் கொடுமைப்படுத்திய ஜவுளிக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் சேவியர் மாநகர காவல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
  இதுதொடர்பாக, சேலம் அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சிறுமிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருந்த ஜவுளிக்கடை உரிமையாளர், குழந்தைகளை துன்புறுத்தியதுடன், ஆரோக்கியமற்ற இடத்தில் தங்க வைத்து, உணவளித்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                        -- இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

சேலம் , தேனியில் புதிய தலைமுறை தமிழன் விருதுகள் பரிந்துரை வாகனம்


 சேலத்தில் நடைபெற்ற புதிய தலைமுறையின் தமிழன் விருதுகளுக்கான பரிந்துரை சேகரிப்பு பயணத்தை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துச்செழியன் துவக்கி வைத்தார்
  இலக்கியம், சமூக சேவை, தொழில், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு புதிய தலைமுறை கடந்த ஆண்டில் இருந்து தமிழன் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுகளுக்கு பல்வேறு மாவட்ட பொதுமக்களும் தங்களுடைய பரிந்துரைகளை ஆர்வமுடன் வழங்கி வருகின்றனர். பரிந்துரைகளை சேகரிக்கும் பொருட்டு இன்று
சேலம் மற்றும் தேனியில் வாக்குகள் சேகரிக்கப்பட்டன. சேலம் வந்த புதிய தலைமுறை வாகனம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தனது சேகரிப்பை துவக்கியது.

  பல்கலைக்கழக மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் பரிந்துரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்தனர். தொடர்ந்து சேலத்தின் பல்வேறு கல்லூரிகளுக்கும் சென்ற புதிய தலைமுறை வாகனத்தை வரவேற்ற மாணவ மாணவியர்கள் தங்கள் பரிந்துரை விண்ணப்பங்களை உற்சாகத்தோடு பூர்த்தி செய்தனர் .
  இதே போல் தேனி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தமிழன் விருதுகளுக்கான பரிந்துரைகள் சேகரிக்கப்பட்டன.
                                        இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்


சேலத்தில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மாயம்


        சேலத்திற்கு மாமனார் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்றபோது, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சுரேஷ் காணாமல் போய்விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே நரசோதிப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சுரேஷ், பொங்கல் தினத்தன்று காலையில் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார்.
பல மணி நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததை அடுத்து, உறவினர்கள் சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 3 தனிப்படை அமைத்து காணாமல் போன சுரேஷைத் தேடி வருகின்றனர்.
இஸ்ரோவில் 6 ஆண்டுகள் விஞ்ஞானியாக பணியாற்றி விலகிய சுரேஷ், தற்போது பெங்களூரு நகரில் கணிப்பொறி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பொங்கலுக்கு, சேலத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தபோது காணாமல் போனார்.
                - இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

குடிபோதையில் ஆர்.ஐ ரகளை : மக்களுக்கு இடையூறு செய்ததால் கைது


     மது அருந்தி விட்டு போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரது நண்பர்கள் இருவரையும் பென்னாகரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்று பேரும் பயணித்த காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுரங்க துறை அதிகாரியாக பணியாற்றி வரும் பார்த்தசாரதி, நண்பர்களுடன் நேற்று மாலை ஒகேனக்கல் சென்று விட்டு பென்னாகரம் வழியாக ஊர் திரும்பியுள்ளனர்.
அப்போது, சாலையிலேயே காரை நிறுத்திய அவர்கள் மதுவும் அருந்தியுள்ளனர்.அதனால், ஏற்பட்ட போக்குவரத்தை சரி செய்வதற்காக போலீசார் பார்த்தசாரதியிடம் பேசியதற்கு, போலீசாரையும் அவர் மிரட்டியுள்ளார். அதனை தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மூவரையும் பென்னாகரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
                                  இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்